பௌர் லண்டன் விஜயம்
Read Time:1 Minute, 9 Second
இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜொன் ஹான்சன் பௌர், அரசாங்க செயலகப் பணிப்பாளர் பாலித கொஹனவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக லண்டன் பயணமாகவுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் பிரித்தானியா பிரதமர் ரொனி பிளயருக்குமிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் முடிவு குறித்து அறிவதற்கு நோர்வே மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தற்போது தோன்றியுள்ள சூழ்நிலை குறித்து இந்த கலந்துரையாடலின்போது இது குறித்து என்ன முடிவு காணப்பட்டது என்பதும் குறித்தும் நோர்வே அறிய ஆவலாயுள்ளது. இதன் காரணமாகவே பௌர் பிரிட்டனுக்கு அவசர விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.