கும்பகோணத்தில் பெண் கத்தியால் குத்திக் கொலை: கணவர் வெறிச்செயல்..!!

Read Time:2 Minute, 19 Second

201706191854230572_woman-killed-husband-attack-in-kumbakonam_SECVPFகும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கீழ தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற மூர்த்தி . டிரைவர். இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு திருணமாகி 16 வருடம் ஆகிறது. குழந்தை இல்லை.

கணவன்-மனைவி கடந்த 8 வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சமீபத்தில் உறவினர்கள் சமாதானம் பேசி இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பின்னரும் கணவன்- மனைவிக்கிடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலையும் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு உருவானது. இதனை கவிதா தனது தம்பி ராஜாவுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.உடனே அவரும் தனது நண்பர்கள் 4 பேரை அழைத்து கொண்டு வந்தார்.ராஜா மற்றும் அவரது நண்பர்களை ஆறுமுகம் அடித்து வெளியே அனுப்பினார். பின்னர் வீட்டின் கதவை உள் பக்கம் பூட்டி விட்டு மனைவியை அடித்து உதைத்தார்.

இது குறித்து ராஜா கும்பகோணம் தாலுகா போலீசிற்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கதவு பூட்டப்பட்டு இருந்ததால் அதனை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கையில் கத்தியுடன் இருந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியை சரமாரி குத்தினார்.இதில் கவிதாவின் கழுத்து, தோல் பட்டையில் குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.

ஆறுமுகத்தை போலீசார் பிடித்து சென்றனர். பின்னர் கொலை செய்யப்பட்ட கவிதா பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் கிடைத்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். மனைவியை கணவர் குத்தி கொன்ற சம்பவம் தாராசுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி மாணவியை கூட்டாக கற்பழித்து ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிய அவலம்..!!
Next post உதவி இயக்குனரை திகைக்க வைத்த ரஜினி..!!