தாய் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 10 வயது சிறுவன்…!!
Read Time:1 Minute, 24 Second
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் தொலைக்காட்சி பார்த்ததை தாய் கண்டித்ததால் 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில் இருக்கும் சர்தார்பூர் காலனியில் வசிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வீட்டில் இந்தியா – பாகிஸ்தான் இறுதி ஆட்டம்(கிரிக்கெட்) பார்த்துக்கொண்டிருந்த போது, சிறுவனின் தாய் வீட்டுப்பாடம் செய்யாமல் தொலைக்காட்சி பார்க்கிறாயே? என கண்டித்துள்ளார்.
தாய் திட்டியதால் மனம் உடைந்த சிறுவன், தாய் வீட்டில் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 வயதே ஆன சிறுவன் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Average Rating