பாகுபலி படத்தால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை! என்ன தெரியுமா..!!

Read Time:1 Minute, 24 Second

625.372.560.350.160.300.053.800.666.160.90ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி 2 படம் சமீபத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்தது. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பலரும் தங்களது திறமைகளை இப்படத்தில் காட்டினர்.

ரூ 1500 கோடிக்கும் மேலாக வசூல் செய்த படம் விரைவில் சீனாவிலும் வெளியாகவுள்ளது. இதனால் இன்னும் வசூலை அள்ளி பெரும் புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச திரைப்பட விழா ஜூன் 22 ல் தொடங்கி இம்மாதம் 29 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே பாகுபலி 2 படத்தை சிறப்பு திரையிடலாக அதிலும் முதல் படமாக காண்பித்துள்ளார்கள்.

இப்படியான ஒரு பெரு விழாவில் முதல் படமாக பாகுபலி 2 போடப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இதனால் மகிழ்ச்சியளிப்பதாக விழாவில் கலந்துகொண்ட ராஜமௌலி ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வும்..!!
Next post இந்திரா காந்திக்கு கடிதம் எழுதிய நடிகர் விவேக்.. பதில் கடிதத்தை பார்த்து அசந்துப்போன நெகிழ்ச்சி தருணம்..!! (வீடியோ)