இரண்டு நாள் தான்! கரும்புள்ளியை மறைக்கலாம்..!!
முகத்தின் அழகினை கெடுக்கும் வகையில் உள்ள கரும்புள்ளிகளை போக்க வெறும் இரண்டு நாட்களே போதும்.
கரும்புள்ளியை போக்கும் வழிகள்?
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இதனால் நம் முகத்தில் உள்ள கருமைகள் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பளபளக்கும்.
பால் மற்றும் சந்தனத்தை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
முல்தானி மெட்டியை ரோஸ் வாட்டரில் கலந்து, அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, காய்ந்ததும் நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மறையும்.
கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து, அதனுடன் சிறிதளவு லாவண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து கழுவி வந்தால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
Average Rating