பல்சர் சுனிலுடன் தொடர்பு என அவதூறு: நடிகர் திலீப்புக்கு பாவனா எச்சரிக்கை..!!
பிரபல மலையாள நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.
இது தொடர்பாக பல்சர் சுனில் மற்றும் பாவனாவின் கார் டிரைவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே நடிகை பாவனா கடத்தலில் நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் கிளம்பியது.
இதை நடிகர் திலீப் மறுத்தார். மேலும்இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பல்சர் சுனில் தனக்கு மிரட்டல் கடிதம் எழுதியதாகவும் கோடிக்கணக்கில் பணம் கேட்டதாகவும், போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் திலீப் ஒரு தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகை பாவனாவுக்கும், அவரை கடத்தியதாக கைது செய்யப்பட்ட பல்சர் சுனிலுக்கும் ஏற்கனவே பழக்கம் உண்டு. இருவரும் நண்பர்கள். கோவாவில் தனியாக தங்கி உள்ளனர் என்று கூறினார்.
திலீப்பின் பேட்டி வெளியானதும் பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோல பாவனாவின் நெருங்கிய நண்பரும், டைரக்டருமான லாலும் இந்த பேட்டிக்கு கண்டனம் தெரிவித்தார். பாவனாவையும், பல்சர் சுனிலையும் சேர்த்து வெளி யான தகவல்கள் பொய்யானது. இதில் உண்மை இல்லை என்று கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்த பாவனா, நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-
என்னைப்பற்றி சமீபத்தில் வெளியான கருத்துக்கள் என்னை வேதனைப்படுத்தி உள்ளது. என்னை கடத்திய பல்சர் சுனிலும், நானும் நண்பர்களாக இருந்தோம் என்று கூறி இருப்பது என்னை காயப்படுத்தி விட்டது. இதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன். யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த விசாரணையை சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்.
வழக்கு விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது. போலீசார் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
நடிகை பாவனாவுக்கு மலையாள பெண் கலைஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் மஞ்சுவாரியார் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சுவாரியார், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி ஆவார். சமீபத்தில் தான் இவர்கள் விவாகரத்து பெற்றனர்.
Average Rating