முன்னணி நடிகை போல் பந்தா காட்டும் அதாகபட்டது மகாஜனங்களே நாயகி..!!

Read Time:2 Minute, 32 Second

201706291756510289_Actress-of-Athagapattathu-mahaJanangale-ShowOff-like-Popular_SECVPFபிரபல காமெடி நடிகரும், இயக்குனருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகியான அறிமுகமாகியுள்ள படம் ‘அதாகபட்டது மகாஜனங்களே’. இப்படத்தில் கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, யோக் ஜேப்பி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இன்பசேகர் இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் என்பவர் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். இந்நிலையில், முதல் படத்திலேயே முன்னணி நடிகைபோல் இவர் பந்தா காட்டுவதாக படக்குழுவினர் நடிகையை பற்றி குறைகூறியுள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஒரு காட்சிக்கு இந்த உடைதான் பொருத்தமாக இருக்கும், அதை உடுத்தி வாருங்கள் என்று நடிகையிடம் சொன்னால், பதிலுக்கு அவரோ, அந்த உடைகள் எல்லாம் அணியமுடியாது. எனக்கேற்றார்போல் உடையணிந்துதான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பாராம்.

தற்போது படம் முடிந்து படக்குழுவினர் அனைவரும் படத்தை புரோமோஷன் செய்யும் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், நடிகையை புரோமோஷனுக்கு அழைத்தபோது, அவர் முன்னணி நடிகைகளைப் போல் புரோமோஷனுக்கெல்லாம் வரமுடியாது என கறாராக சொல்லிவிட்டாராம். இதனால், படக்குழுவினர் ரொம்பவும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் முதன்முதலில் அறிமுகமாகியுள்ள இந்நாயகி ஆரம்பத்திலேயே முன்னணி நடிகை போல் பந்தா காட்டுவது அவரது வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்று கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படம் வருகிற ஜுன் 30-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் வைரலாக வேண்டும் என்று சீன இளைஞர் செய்த விபரீத காரியம்..!! (வீடியோ)
Next post மனநிலை பெண் கற்பழித்து கொலை: வாய்க்கால் கரையில் உடலை வீசிச்சென்றனர்..!!