மணமகன் நடனம் ஆடியதால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!!

Read Time:1 Minute, 51 Second

marriage001.w245திருமண நிகழ்ச்சியின்போது குடிபோதையில் மணமகன் பாம்பு நடனமாடியதால் கோபமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரியங்கா(23) என்பவருக்கும் அனுபவ் மிஸ்ராவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்கான அனைத்து சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு வந்த நிலையில், மாப்பிளை அழைப்பின்போது, மணமகன் குடிபோதையில் வந்துள்ளார்.

போதையில் நிதானமில்லாமல் பாம்பு நடனமாடிய மணமகன் மிஸ்ராவை தனக்கு பிடிக்கவில்லை என கூறி பிரியங்கா திருமணத்தை நிறுத்திவிட்டார்.

மணமகனின் இத்தகைய செயலை பார்த்து அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். எனினும், மணப்பெண் வீட்டாரை சம்மதம் செய்தும் அவர் சமாதானங்களை ஏற்க மறுத்துவிட்டார்.

இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதையடுத்து, காவல்துறையினர் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தனர்.

மறுநாளே, நல்ல குணமுடைய அமைதியான மணமகனை அப்பெண் மணமுடித்தார். குடிகார மாப்பிள்ளையுடன் தனது வாழ்க்கை சிறக்காது என தீர்க்கமாக முடிவெடுத்த பிரியங்காவுக்கு அந்த ஊர் மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்..!!
Next post விஜய் போலவே பேசி அசத்தல் ஸ்கோர் வாங்கிய பிரபலம்! யாரா இருக்கும்..!!