பட்டப்பகலில் பெண்ணின் செயின் பறிப்பு.. அதிகரிக்கும் திருட்டுக்கள்.. சிசிடிவியால் சிக்கிய பைக் ஆசாமிகள்..!! (வீடியோ)
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வழிப்பறி, திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்டவை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பெண்கள் சாலையில் தனியாக நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.
அவ்வாறு அம்பத்தூர் அருகே சுமித்ரா என்னும் பெண் ஒருவர் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து மகளுடன் ஜெஜெ நகர், திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்மநபர்கள், சுமித்ரா கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து சுமித்ரா, ஜெஜெ நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், சுமித்ரா தனது மகளுடன் நடந்து சென்றபோது, பைக் ஆசாமிகள் அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து, கேமராவில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Average Rating