தாயை இழந்து தந்தையின் ரிக்ஷாவில் பயணித்த குழந்தை… தந்தையையும் இழந்து அனாதையான பரிதாபம்..!!
Read Time:1 Minute, 15 Second
இந்தியாவில் பச்சிளம் குழந்தையுடன் நபர் ஒருவர் ரிக்ஷா ஓட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் பாபு கோலி, கடந்த 2012ம் ஆண்டு குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மனைவி இறந்துவிட குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் இல்லாததால் கையில் வைத்துக் கொண்டு ரிக்ஷா ஓட்டி பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகவே பலரும் உதவி புரிந்தனர். குழந்தை தாமினி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார்.
தற்போது குழந்தைக்கு நான்கு வயதான நிலையில், தந்தை பாபுவும் இறந்துவிட்டார். அவரது இல்லத்தில் சடலமாக கிடக்க அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
மனைவி இறந்த துக்கத்திலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating