அத்தை மகனை மறக்க முடியாததால் திருமணமான 11 நாளில் கணவரை கொன்ற நர்சு..!!

Read Time:4 Minute, 30 Second

201707021848142562_Kathal-1._L_styvpfராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 32). இவருக்கும் மண்டபம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (27) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி சக்கரக்கோட்டை அம்மன்கோவில் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கணேஷ்குமார் பிணமாக கிடந்தார். திருமணமான 11 நாட்களில் கணேஷ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கணேஷ்குமாரை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள மருத்துவ மனையில் நர்சாக வேலை பார்த்து வந்த பாக்கியலட்சுமி அவரது அத்தை மகன் லோக நாதனை (22) காதலித்தார்.வயது வித்தியாசத்தை காரணம் காட்டி அவரது திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு கணேஷ்குமாருடன் பாக்கியலட்சுமிக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னும் லோகநாதனை பாக்கியலட்சுமியால் மறக்க முடியவில்லை. இதனால் லோகநாதனுடன் சேர்ந்து கணேஷ்குமாரை தீர்த்துக் கட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார், பாக்கியலட்சுமியையும், லோகநாதனையும் கைது செய்தனர். கொலை குறித்து லோகநாதன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தாய் மாமன் மகளான பாக்கியலட்சுமியும் நானும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். ஆனால் எங்கள் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. வயது வித்தியாசம் உள்ளது என அவர்கள் கூறினர். இந்த கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

இருப்பினும் பாக்கிய லட்சுமியை கட்டாயப் படுத்தி கணேஷ் குமாருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இருப்பினும் திருமணத்திற்கு பின்னரும் எனக்கும் பாக்கியலட்சுமிக்கும் தொடர்பு நீடித்தே வந்தது.

மலேசியாவில் இருந்து வந்த கணேஷ்குமார், மதுரையில் வேலை பார்க்க முடிவு செய்து அடிக்கடி வேலை தேடி சென்றார். இதனை பயன்படுத்தி பாக்கியலட்சுமியை வீட்டில் சந்தித்து வந்தேன். கடந்த 20-ந் தேதி இருவரும் சந்தித்தபோது எங்களுக்கு இடையூறாக இருக்கும் கணேஷ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். இதற்கு ஏற்றாற் போல் கணேஷ்குமார் தனது செல்போனை பழுது பார்க்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனை பயன்படுத்தி அவரை மறுநாள் (21-ந் தேதி) சக்கரக்கோட்டை மதுக்கடைக்கு அழைத்துச்சென்று மது அருந்தினோம். பின்னர் அவரை இரவு 11 மணி அளவில் அம்மன் கோவில் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவர் மது மயக்கத்தில் இருந்தபோது கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

பின்னர் மதுவுடன் கலக்க வைத்திருந்த குளிர் பானத்தில் கையை சுத்தம் செய்து விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். இருப்பினும் போலீசார் துப்புதுலக்கி என்னை கைது செய்து விட்டனர்.

மேற்கண்டவாறு வாக்கு மூலத்தில் கூறிள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக் பாஸ் நிகழ்ச்சியை வச்சி செய்ய இருக்கும் வெங்கட் பிரபு டீம்! வைரலாகும் வீடியோ..!!
Next post கேரளாவின் அடர்ந்த காட்டுக்குள் உருவாகும் ‘சூறாவளி’..!!