மனைவியின் கண்முன்னே கணவர் கொலை… மனசாட்சியின்றி வேடிக்கை பார்த்த மக்கள்..!! (வீடியோ)
பட்டப்பகலில் மனைவி கண் முன்னே கணவர் குத்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா ஷுட்டிங்கை வேடிக்கை பார்ப்பது போன்ற ஒருவர் கூட தடுக்க முற்படாமல் பொதுமக்கள் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் முராதாபாத்திற்கு விஷன்புதுர் ஐ சேர்ந்த நபர் மனைவியுடன் ஷாப்பிங் செய்ய வந்துள்ளார், அவரை ஒரு கும்பல் கத்தியால் சரமாரியாக குத்துகின்றது அவர் கடைக்குள் ஓடி தப்பிக்க முற்படும் போது கடையில் இருப்பவர்களும் அவரை வெளியே துரத்தி விடுகின்றனர்.
கணவர் குத்திக் கொல்லப்படுவதை பொதுமக்களும் வேடிக்கை பார்க்கின்றார்களே என மனைவி கணவரை காப்பாற்ற போராடுகின்றார், இதில் அவருக்கும் காயங்கள் ஏற்படுகின்றது.
இது அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் கடன் வாங்கியவர் ரவடிகளை வைத்து கொலை செய்துள்ளதாக தககவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating