காதலியை அரிவாளால் வெட்டி கொலை செய்த காதலன்: காரணம் என்ன?..!!
மாணவர் விடுதியில் உடலுறவுக்கு உடன்படாத வேலைக்கார பெண்மணியை கொடூரமாக வெட்டிக் கொன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள மூக்கூடல் பகுதியில் வசித்து வரும் ஆனந்தி (வயது 38) என்பவருக்கும் சந்திரசேகரன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஆனந்தியின் கணவர் சந்திரசேகரன் இறந்துவிடவே விடுதியில் சமையல் வேலைக்கு சென்று தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இந்நிலையில், அவர் விடுதியில் தனியாக இருக்கும் வேளையில் விடுதிக்கு வந்த நபர், ஆனந்தியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் ஆனந்தியை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்திலெயே ஆனந்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இந்த வெறிச் செயலை செய்தது ஆனந்தியின் காதலன் செல்லப்பா என்பது தெரியவந்தது.
ஆனந்தியின் கணவர் இறந்த பிறகு அவர் தனியாக வசித்து வந்தார் .அவரின் தனிமையை எனக்கும் சாதகமாக பயன்படுத்திக்கொண்டேன்.
Average Rating