கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய ஆசிரியை – வாக்குமூலம்..!!

Read Time:4 Minute, 20 Second

201707072148312010_Teacher-pretended-to-kill-her-husband-died-of-a-heart-attack_SECVPFதிருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலத்தை அடுத்துள்ள பெதப்பம் பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 46). விவசாயி. இவரது மனைவி ரேவதி (35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ரேவதி பி.எட். முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்தார்.

கணவர் படிக்கவில்லை. தனக்கு நிகரான அழகு இல்லை என்று ரேவதி கூறி வந்தார். இருவருக்கும் இடையே இது குறித்து அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 30-ந்தேதி கணேசன் திடீரென இறந்துவிட்டார். அவரது மனைவி ரேவதி கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுதார்.

இதனையடுத்து உறவினர்கள் கணேசனின் உடலை முறைப்படி புதைத்தனர். இந்நிலையில் 8-ம் நாள் கணேசனுக்கு காரியம் நடத்தப்பட்டது.

அப்போது ரேவதிக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணேசன் இறந்ததாக அரசல்புரசலாக பேசப்பட்டது. இது குறித்து அறிந்த கணேசனின் அண்ணன் சிவக்குமார் என்பவர் குடிமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கணேசனின் உடல் தோண்டி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரதே பரிசோதனை அறிக்கையில் கணேசன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து ரேவதியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ரேவதி போலீசில் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

நான் பி.எட் வரை படித்தவள். எனது படிப்புக்கும் அழகுக்கும் நிகரானவர் கணவராக கிடைப்பார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் படிக்காத, அழகு இல்லாத கணேசன் எனக்கு கணவரானார். இதனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு இருந்தது.

இந்நிலையில் நான் உடுமலை- பொள்ளாச்சி அரசு பஸ்சில் தினமும் பள்ளிக்கு செல்லும்போது பஸ் டிரைவர் சக்திவேல் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. தனிமையில் இருவரும் சந்தித்து உல்லாசம் அனுபவித்தேம். எங்கள் கள்ளக்காதல் எனது கணவருக்கு தெரிந்து விட்டது.

இது குறித்து என்னிடம் கேட்டு சத்தம்போட்டார். அழகாக இல்லாத, படிப்பறிவு இல்லாத எனது கணவர் கள்ளக்காதலை கண்டித்ததால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.இதையடுத்து நான் சக்திவேலுவிடம் கூறினேன். அதற்கு சக்திவேல் உடலில் காயம் இல்லாமல் இயற்கையாக இறந்தபடி உனது கணவரை கொல்ல வேண்டும் என்று கூறினார்.

அதன்படி கடந்த 30-ந்தேதி எனது வீட்டுக்கு சக்திவேல் வந்தார். அப்போது எனது கணவர் தூங்கிக்கொண்டிருந்தார். அவரின் கழுத்தை சக்திவேல் நெரித்தார். நான் எனது கணவரின் காலை இறுக்கி பிடித்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் எனது கணவர் இறந்து விட்டார். கள்ளக்காதலன் சக்திவேல் யாருக்கும் தெரியாமல் சென்று விட்டார். பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு கணவர் இறந்து விட்டதாக கதறி அழுது திசை திருப்பினேன். இப்போது மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து போலீசார் ரேவதி, அவரது கள்ளக்காதலன் சக்திவேல் ஆகியோரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லியில் இருந்து நேரடி விமான சேவை: ஏர் இந்தியாவின் முதல் விமானம் வாஷிங்டனில் தரையிறங்கியது..!!
Next post சினேகன் இதற்குமுன் சிக்கிய சர்ச்சைகள்..!! (வீடியோ)