கண்களை சுற்றி கருவளையமா? 2 சூப்பர் வழிகள்… ட்ரை பண்ணி பாருங்க…!!
நம் கண்களை சுற்றியுள்ள கரு வளையம் நம்மை வயதான தோற்றமாக வெளிக்காட்டும். அதற்கு தினமும் குறைந்தது 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
ஆனால் எப்படி ஏற்படும் கருவளையத்தை போக்க இயற்கையில் உள்ள எளிய வழிகளை பற்றி பார்க்கலாம் வாங்க..
கண்களின் கருவளையை போக்க என்ன செய்யலாம்?
வெள்ளரி, உருளைக் கிழங்கு ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் ஒரு வெள்ளை துணியை எடுத்து அதை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த உருளைக் கிழங்கு கலவையை ஊற்ற வேண்டும். அதன் பின் 1/2 மணி நேரம் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.
இம்முறையை வாரத்தில் 5 நாட்கள் செய்து வந்தால், கரு வளைய பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் கரு வளையம் மறைந்துவிடும்.
Average Rating