அலுவலகத்திற்குள்ளும் ஹெல்மெட்டுடன் பணிபுரியும் அரசு ஊழியர்கள்..என்னக் கொடுமை சார் இது..!! (வீடியோ)
பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் பணியாளர்கள் வேலை பார்க்கும் பொழுதும் கூட ஹெல்மெட்டுடன் தான் பணி புரிகின்றனர்.
இதற்கு காரணம், அந்த வட்டாட்சியர் அலுவலகமானது இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அலுவலகத்தின் மேற்கூரையிலிருந்து கற்கள் மற்றும் சிமெண்ட் ஸ்லாப்புகள் அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. அந்த கட்டடம் அபாயகரமானது என்று பீகார் மாநில பொதுப்பணித்துறையினர் கடந்த ஆண்டே அறிவித்தது. ஆனாலும் அலுவலகத்துக்காக மாற்றாக புதிய கட்டடம் ஒதுக்கப்படவில்லை.
இதனால், இடிந்து விழ்ம் நிலையில் இருக்கும் கட்டடத்திலேயே அந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மேற்கூரையில் இருந்து கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், இதனால் தான் அங்குள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தலையில் ஹெல்மெட்டுடன் பணிபுரிவதாக கூறுகின்றனர்.
Average Rating