ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் செம்பு பாத்திரங்கள்..!!
செம்பு என்பது தங்கம் மற்றும் வெள்ளிக்கு அடுத்தபடியாக ஓர் உயர்மிகு உலோகம். செம்பின் பயன்பாடு பலதரப்பட்டவாறு உலகெங்கும் அரியப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. கி.மு. 9000-ம் ஆண்டுக்கு முன்பே கண்டறியப்பட்ட செம்பு உலோகம் இன்றளவும் அதிக பயன்பாட்டில் உள்ள உலோகமாக உள்ளது.
செம்பு அல்லது தாமிரம் என்றவாறு தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ள இவ்வுலோகத்தின் மூலம் அதிகளவு பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய காலத்தில் வீடு முழுவதும் செம்பு பாத்திரங்கள் இருப்பது பெரிய கவுரமாகவே கருதப்பட்டன. நாளடைவில் செம்பு பாத்திரங்களின் பயன்பாடு பெரும் அளவு குறைந்து விட்டன. பெரும்பாலும் தமது முன்னோர் பயன்படுத்திய செம்பு பாத்திரங்களை அப்படியே பாதுகாத்து அடுத்த தலைமுறையினர் வைத்துள்ளனர்.
ஆயினும் தற்போது செம்பு பாத்திரங்களின் சிறப்பும், பெருமையும் அறிந்து மீண்டும் செம்பு பாத்திரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. செம்பில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அழகு மிளிர இருப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் பாத்திரங்களாக உள்ளதால் இன்றைய இல்லங்களில் பிரதான இடம் பிடித்துள்ளன.
Average Rating