முதல் சந்திப்பிலேயே காதலிக்கு நேர்ந்த கதி: எஸ்கேப்பான காதலன்..!!

Read Time:2 Minute, 42 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (3)முதல் சந்திப்பிலேயே வைர மோதிரத்தோடு எஸ்கேப் ஆன காதலன் பற்றி இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையின் கர் பகுதியை சேர்ந்தவர் வித்யா.

இவர் திருமணத் தகவல் தொடர்பான இணைய தளத்தில் தனக்கான வருங்கால கணவரை தேடிக்கொண்டிருந்தார்.

அப்போது அவர் கண்ணில் சிக்கினார் அழகான, ஸ்டைலான இளைஞர் ஒருவர். போட்டோவை பார்த்ததுமே வித்யாவுக்குப் பிடித்துவிட்டது.

அவர் பெயர் ஆர்யன் படேல், மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தது.

பின்னர் இமெயிலில் அவரைத் தொடர்பு கொண்டார், போன் நம்பரை மாற்றிக்கொண்டனர்.

பின்னர் வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சரில் அடிக்கடி பேசி காதல் வளர்த்தனர்.

’தூர தூர இருந்து பேசிட்டே இருக்கோமே. நேர்ல சந்திக்கலாம்’ என்றார் படேல்.

சரி என்று கர் பகுதியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்திக்க முடிவு செய்தனர். செவ்வாய்க்கிழமை மாலை அங்கு சந்தித்தனர். படேல், வித்யாவிடம் சிரிக்க சிரிக்கப் பேசினார்.

பின்னர் வித்யாவின் கையில் போட்டிருந்த வைர மோதிரத்தைப் பார்த்து, ’ஆஹா, என்ன அழகு’ என்றார். ’நல்லாருக்கா’ என்று கேட்ட அப்பாவி வித்யா, அதைக் கழற்றி, ’இந்தா பாருங்க’ என்று நீட்டினார்.

அதை படேல் கையில் வைத்துப் பார்த்துகொண்டிருந்த போது அவரது செல்போன் ஒலித்தது.

‘ஒரு நிமிஷம்’ என்று போனைத் தூக்கிக்கொண்டு வெளியே போன படேல் பின்னர் திரும்பி வரவே இல்லை என வித்யா தெரிவித்துள்ளார்.

படேல் போனுக்கு அடித்தால் சுவிட்ச் ஆஃப் என தகவல் வந்தது. அதிர்ச்சியான வித்யா உடனடியாக இதுபற்றி கர் பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்ய, வைர மோதிரத்துடன் தலைமறைவான படேலை விசாரித்து வருகிறது பொலிஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலக்கும் ஓவியாவின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா..? பிக் பாஸின் வைரல் வார்த்தைகள்..!!
Next post வாழ்க்கைக்கு தேவையான “வாழைப்பூ”வின் நன்மைகள்..!!