திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இரு மாதங்களில் ஏற்பட்ட சோகம்..!!

Read Time:2 Minute, 14 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90திருமண பந்தத்தில் இணைந்து இரு மாதங்களில் டெங்கு நோய் தாக்கம் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதுடன், 27 வயதான ரங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் கடந்த மே மாதம் 18ம் திகதி திருமண பந்தத்தில் ரங்க மற்றும் மஹேஷா என்ற தம்பதியினர் இணைந்தனர்.

மகிழ்ச்சியுடன் திருமண வாழ்க்கைகயை ஆரம்பித்த ரங்க மற்றும் மஹேஷாவின் திருமண வாழ்க்கை ஒன்றரை மாதமே நீடித்துள்ளது.

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த ரங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாவனல்ல, உடுமஹனே பிரதேசத்தை சேர்ந்த ரங்க மோட்டார் வாகன மேலதிக பகுதி விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

தனது தாய், தங்கை மற்றும் மனைவியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த ரங்க தினமும் வீட்டில் இருந்து தொழிலுக்கு செல்வதனை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த நிலையில் திடீரென ரங்க டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனை பெரிதாக கண்டுக்கொள்ளாத ரங்க தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டு மீண்டும் வழமை போன்று தொழிலுக்கு செல்ல ஆரம்பித்துள்ளார்.

எனினும் அவரது டெங்கு நோய் தீவிரமடைந்து மாவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற ரங்க சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கப் போவது யார் தெரியுமா..? ரகசியங்களை போட்டுடைத்த நமீதா..!! (வீடியோ)
Next post பெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்..!!