ஆண் குழந்தை மோகத்தால் மனைவியை எரித்த கணவர்..!!
ஹைதராபாத் மாநிலம் பீபிநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி பனோத்சங்கர் நாயக்-சாவித்ரி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போதும் சாவித்ரி கர்ப்பமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் பனோத்சங்கர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து சாவித்ரியிடம் சண்டை போடுவார். தனக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் சண்டை போட்டுள்ளார்.
சம்பவ தினத்தன்று சங்கர் குடித்துவிட்டு, தற்போதும் நீ பெண் குழந்தைதான் பெறப்போகிறாய் எனக் கூறி சண்டையிட்டுள்ளார்.
சண்டைக்குப் பிறகு, சாவித்ரியோடு முதல் பெண் குழந்தையுடன் சேர்ந்து தூங்கியுள்ளார். சங்கரோடு மற்றொரு பெண் குழந்தை தூங்கியுள்ளது.
இரவில் விழித்தபோது, சங்கர் அருகில் இருந்த மண்ணெண்ணெயை சாவித்ரி மற்றும் குழந்தையின் மீது ஊற்றி பற்ற வைத்து விட்டு, அங்கிருந்து தப்பியுள்ளார்.
சாவித்ரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்துள்ளனர். சம்பவ இடத்திலேயே சாவித்ரியும் குழந்தையும் இறந்துவிட்டனர்.
Average Rating