விரைவில் அரசியல் களத்தில் கமல்.!!
நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியலில் குதிக்கவிருக்கிறார் . இதை நேரடியாக தெரிவிக்காமல் மறைமுகமாக கவிதை மூலம் உணர்த்தியிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்களும், அபிமானிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அத்துடன் தம்மீது தமிழக அமைச்சர்கள் முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாகவே இந்த கவிதை அமைந்திருக்கிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
அவர் எழுதிய கவிதை இதோ..
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை
தோற்றிருந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்
இதன் மூலம் கடந்த ஆண்டுகளில் தமிழக திரையுலகில் ரஜினி , கமல் ரசிகர்கள் மோதிக் கொண்டனர். தற்போது இவ்விருவர்களின் ரசிகர்களும் மீண்டும் அரசியல் களத்தில் மோதக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
Average Rating