விபசாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை..!!
வட கொரிய தலைவர் கிம் யொங் –உன்னின் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றும் பிரிவினரால் திருட்டு, விபசாரம் மற்றும் தென் கொரிய தொலைக்காட்சியை கண்டுகளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு பாடசாலை வளாகங்களில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக வட கொரிய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தெரிவிக்கின்றனர்.
வட கொரிய காவல் அதிகாரிகள் சில சமயங்களில் துப்பாக்கி ரவைகளை வீணா க்க விரும்பாமல் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை அடித்துக் கொன்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் அரிசி, செப்பு என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு சந்தை களிலும் ஆற்றங்கரைகளிலும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தென் கொரிய சியோல் நகரை அடிப்படையாகக் கொண்ட அரச சார்பற்ற அமைப்பான மாற்று நீதி தொழிற்பாட்டுக் குழுவானது வட கொரி யாவிலுள்ள மரணதண் டனை நிறைவேற்றத் தளங்களைக் காண்பிக்கும் வரைபடமொன்றை வெளி யிட்டுள்ளது.
Average Rating