சாப்பிட்டுக்கொண்டிருந்த நபரை நெஞ்சில் குத்திக்கொன்ற மனிதமிருகம்: பொலிசில் கூறிய அற்ப காரணம்..!! (வீடியோ)
அமெரிக்காவில் பட்டப்பகலில் தெரு ஓரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நபரை மர்ம நபர் ஒருவன் கத்தியால் நெஞ்சில் குத்திக்கொன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீடியோவில், நபர் ஒருவன் தெரு ஓரத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
அப்போது, அவ்வழியாக வரும் மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சில் குத்துகிறான். வலியில் துடித்த பாதிக்கப்பட்டவன் உதவிக்காக சாலையில் செல்லும் காரை நோக்கி ஓடுகிறார்.
மர்ம நபரும் அவரை பின்தொடர்ந்து செல்ல இறுதியில் பாதிக்கப்பட்ட நபர் சாலையிலே சரிந்துள்ளார். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரை சோதித்த மருவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிசார் இச்செயலில் ஈடுபட்ட எரிக் என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவன் திருட முயன்றதால் தற்காப்பிற்காக குத்தியதாக தெரிவித்துள்ளான்.
Average Rating