அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால் அதிர்ச்சி தோல்வி
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. தற்போது இப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருமான நடால், ரஷிய வீரர் மிகைலுடன் மோதினார்.
இதில் நடால் 3-6, 7-5, 6-7, 1-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-3, 7-6, 6-3 என்ற நேர் செட்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த மார்க்கை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.
பெண்களுக்கான ஒற் றையர் பிரிவு கால் இறுதி ஆட் டங்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமேலி மவுரஸ்மோ (பிரான்சு), ரஷிய வீராங்கனை சபீனாவை எதிர் கொண்டார். இதில் மவுரஸ்மோ 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷியா) 7-6, 7-6 என்ற செட் கணக்கில் கொலு வினைவும் (பிரான்சு), ஜஸ்டின் ஹெனின் (பெல் ஜியம்) 6-4, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்க வீராங்கனை லிண்ட்சே டேவன் போர்ட் டையும் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினர்.
பெண்களுக்கான அரை இறுதி ஆட்டங்களில் மவுரஸ்மோ (பிரான்சு), மரியா ஷரபோவாவுடன் (ரஷியா) மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் ஜெலீனா ஜான் கோவிக் (செர் பியா), ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்) மோதுகின்றனர்.