இளைஞரை அடித்து, உதைத்து மலம் உண்ண வைத்த கொடூரம்..!!

Read Time:3 Minute, 21 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)இந்தியாவில் இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி இளைஞர் இருவரை அடித்து உதைத்து மலம் உண்ண வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள வினேகா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்து மலம் உண்ண வைத்துள்ளனர் பெண்ணின் உறவினர்கள்.

இளைஞரை அடித்து உதைத்து சித்திரவதை செய்தது மட்டுமல்லாமல், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதனை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்திலும் பரவ விட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளம்பெண்ணும், தானும் காதலித்து வந்ததாகவும், இது பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் அந்த பெண்ணை துன்புறுத்தவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண் தான் தம்மை தோட்டத்திற்கு அழைத்ததாகவும், அப்போது பெண்ணின் சகோதரன் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் தனக்கு இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது எனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட இளைஞரும், இளம்பெண்ணும் அருகருகே வசித்து வந்துள்ளனர்,

இளம்பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை குறித்த இளைஞர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக துன்புறுத்தி வருவதாக புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞர் மீதும், அவரை அடித்து துன்புறுத்தி, சித்திரவதை செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய பெண்ணின் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவமானது தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை..!!
Next post ரசிகர்கள் அதிகம் இருந்தும், நடித்ததால் வெளியேற்றப்பட்ட நமிதா! மீண்டும் ஜுலியின் நாடகம்..!!