பத்து வயது சிறுமியை கர்ப்பமாக்கிய உறவினர்..!!!

Read Time:2 Minute, 22 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (4)உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 30 மாத கருவை சுமந்துவரும் 10 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரில் வீட்டு வேலை செய்து நேபாளத்தை சேர்ந்த ஒரு தம்பதி வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.

தம்பதியின் 10 வயது மகள் அவர் உறவினர் ஒருவரால் பலமுறை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதில் கருவுற்றுள்ளார்.

சிறுமியின் வயிறு திடீரென பெரிதானதை பார்த்த பெற்றோர் மருத்துவரிடம் கூட்டி சென்றுள்ளனர். அப்போது தான் சிறுமி கர்ப்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து பொலிசில் தரப்பட்ட புகாரில் சிறுமியை சீரழித்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், 30 மாத கருவை சுமந்து உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும் அவதிப்பட்டு வரும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது தொடர்பாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட உத்தரவிட்டது.

சிறுமியை பரிசோதித்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் மருத்துவர்கள் சமர்பித்தனர். அதில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது அவரது உயிருக்கு ஆபத்தாகலாம் என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீதிமன்றம் கருக்கலைப்பு செய்ய தடை விதித்துள்ளது. இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுக பெற்றோர் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரசிகர்கள் அதிகம் இருந்தும், நடித்ததால் வெளியேற்றப்பட்ட நமிதா! மீண்டும் ஜுலியின் நாடகம்..!!
Next post தேவையில்லை என்று குப்பையில் போடும் வெங்காயத்தோலில் இவ்வளவு நன்மைகளா..?..!!