இளவரசி டயானா எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படம்: இளவரசர் ஹரி நெகிழ்ச்சி..!! (வீடியோ)
மறைந்த பிரித்தானிய இளவசரி டயானா தம்முடன் இணைந்து கடைசியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன் முறையாக பார்த்து இளவரசர் ஹரி நெகிழ்ந்துள்ளார்.
பிரித்தானியா இளவரசி டயானா விபத்தில் உயிரிழந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த ஆவணப்படத்தில் தான் இளவரசர் ஹரியுடன் டயானா எடுத்துக் கொண்ட கடைசி புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
அதில் இளவரசர் ஹரியை மிகுந்த பாசத்துடன் கழுத்தோடு சேர்ந்து இறுக அணைத்துக் கொள்ளும் டயானாவும் முகம் முழுக்க புன்னகையுடன் இளவரசர் ஹரியும் உள்ளனர்.
அந்த ஆவணப்படத்தில் இளவரசர் வில்லியம் தமது சகோதரர் இளவசர் ஹரிக்கு குறித்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி, மிகவும் சிறப்பு வாய்ந்த புகைப்படம் இது, இதில் நீங்கள் இருவரும் அருமையாக உள்ளீர்கள் என கூறுகிறார்.
இதற்கு பதிலளித்த இளவரசர் ஹரி, ஆம் இப்போதும் அந்த மெல்லீசான கால்கள் இன்னும் என் நினைவில் உள்ளது என்றார்.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் இளவரசி டயானாவின் தனிப்பட்ட புகைப்பட தொகுப்பாக இதுவரையில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
குறித்த தொகுப்பினை இளவரசர்கள் இருவருமே தற்போது முதன் முறையாக வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
Average Rating