12 வயது சிறுமி கர்ப்பம்: கைதான டிரைவர் சேலம் ஜெயிலில் அடைப்பு..!!

Read Time:2 Minute, 17 Second

201707241617592515_12-year-old-child-molested-driver-arrest-police_SECVPFநெகமம் அருகே கூலித்தொழில் செய்து வருபவரின் 12 வயது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி(55). டிராக்டர் டிரைவர். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி ஆறுச்சாமியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஆறுச்சாமி மட்டும் வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பக்கத்துவீட்டில் வசித்து வந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சிக்கன் தருவதாக கூறியுள்ளார். இதை நம்பிச்சென்ற சிறுமியை ஆறுச்சாமி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அதை வீட்டில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வாந்தி எடுத்ததை அடுத்து பெற்றோர்கள் மருத்துவ பரிசோதனை செய்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பெற்றோர்கள் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் ஆறுச்சாமிதான் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆறுச்சாமியை கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான ஆறுச்சாமி சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏன் இப்படி பண்றாங்க? பிக் பாஸை குறை சொல்லும் கஞ்சா கருப்பு..!!
Next post ஷாப்பிங்கில் மனைவி மும்முரம்: சீன வணிக வளாகங்களில் ஆண்களுக்கு கேளிக்கை அறை..!!