இறைச்சிக் கடைக்குள் 2-வது மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர்..!!

Read Time:2 Minute, 24 Second

201707241621274990_Second-wife-murdered-by-husband-near-thiruvananthapuram_SECVPFதிருவனந்தபுரம் அருகே உள்ள பரப்பனங்காடி பகுதியை சேர்ந்தவர் நைஜீ புதின் (வயது 36). இவர் அந்த பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரகீனா (30).

இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முஜிரா (26) என்ற பெண்ணுடன் நைஜீபுதினுக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.

இதை தொடர்ந்து முஜிராவை 2-வது திருமணம் செய்துகொண்டார். பிறகு அவரை தனி வீட்டில் வைத்து அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.

சமீப நாட்களாக நைஜீ புதின்-முஜிரா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முஜிராவை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தனது இறைச்சிக்கடைக்கு நைஜீபுதின் அழைத்துச் சென்றார்.

அன்று மாலை கடையில் வியாபாரம் முடிந்ததும் கடையில் பணியாற்றிய ஊழியர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். மறுநாள் காலை கடைக்கு வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையின் உள்ளே தலை துண்டித்த நிலையில் முஜிரா பிணமாக கிடந்தார்.

அதேசமயம் நைஜீபுதின் மாயமாகி இருந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பரப்பனங்காடி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்களது முதல்கட்ட விசாரணையில் முஜிராவை அவரது கணவர் நைஜீபுதின் தான் தலையை துண்டித்து கொலை செய்தது தெரிய வந்தது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். என்ன காரணத்திற்காக அவர் மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஷாப்பிங்கில் மனைவி மும்முரம்: சீன வணிக வளாகங்களில் ஆண்களுக்கு கேளிக்கை அறை..!!
Next post விஷாலை தம்பியாக்கிய மிஷ்கின்..!!