14 வயதில் குழந்தை பெற்ற சிறுமி! உறவினர்கள் கண்டித்ததால் சாலையோரம் வீசி சென்ற பரிதாபம்..!!

Read Time:2 Minute, 21 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)தமிழகத்தில் 14 வயதில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி அக்குழந்தையை சாலையோரத்தில் விட்டுவிட்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.

சேலத்தின் தாரமங்கலம் காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு குழந்தையொன்று அழும் சத்தம் கேட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது ஏழு மாத பெண் குழந்தையொன்று அனாதையாக கிடந்துள்ளது, அருகே புது துணிகளும் இருந்துள்ளன.

உடனடியாக பொலிசுக்கு தகவல் அளிக்கப்படவே விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டியை சேர்ந்த பெண்மணி ஒருவர், குழந்தை தன் மகள் வழி பேத்தி என்றும், உறவினர்கள் திட்டியதால் குழந்தையை சாலையில் விட்டுவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன் என் கணவர் இறந்துவிட்டார், எனக்கு 17 வயதில் மகளும், 14 வயதில் மகளும் இருக்கின்றனர்.

இரண்டாவது பெண் 13 வயதாக இருக்கும் போது காணாமல் போய்விட்டாள், பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

சமீபத்தில் கையில் குழந்தையுடன் வந்தாள், அவளை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, உறவினர்களும் திட்டினர்.

இரண்டு நாட்களாக வீட்டின் அருகே இருந்தாள், நானும் திட்டியதால் விரக்தியில் குழந்தையை விட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

மகளை காணாததால் தேடி வந்தேன், அப்போது தான் எனக்கு பொலிஸ் நிலையத்தில் குழந்தை இருப்பது தெரியவந்தது என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்திய பின்னர் அவரிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடம்பில் நிகழும் அதிசயம் தெரியுமா?..!!
Next post பாலியல் கவர்ச்சிக்கு உதவும் சென்ட் – ஃபெரமோன்கள்..!!