சப்பாத்தி வட்டமாக இல்லை – கர்ப்பிணியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்..!!
இந்தியாவில் நபர் ஒருவர் சப்பாத்தி வட்டமாக இல்லாததால் கர்ப்பிணி மனைவியை கழுத்து நெறித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ஜஹாங்கிரிபுரி பகுதியிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. 22 வயதான சிம்ரன் என்ற கர்ப்பிணி பெண் தனது கணவர் மற்றும் நான்கு வயது குழந்தையுடன் ஜஹாங்கிரிபுரி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு உணவு அருந்தும் போது சப்பாத்தி ஏன் வட்டமாக இல்லை என கணவர் பிரச்சனை எழுப்பியுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்ற கோபமடைந்த கணவர் சிம்ரன் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார்.
உடனே நான்கு வயது மகள் அம்மாவை காப்பாற்ற முயன்ற போது, குழந்தையை இழுத்துச்சென்று ஒரு அறைக்குள் அடைத்துள்ளார். பின்னர், சிம்ரனின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
வீட்டில் சிம்ரன் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரர் உடனே பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, சிம்ரனின் நான்கு வயது குழந்தை நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் விளக்கியுள்ளார். தற்போது, தலைமறைவான சிம்ரனின் கணவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வியாபாரத்தில் தோல்வியடைந்த சிம்ரனின் கணவர், தற்போது, தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
Average Rating