பிக்பாஸ் வீட்டில் நீடிக்க ஜுலியின் அடுத்த மாஸ்டர் ப்ளான்…!! (வீடியோ)
பிக்பாஸ் வீட்டில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக ஜூலி தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு மீடியா வெளிச்சத்துக்கு வந்தவர் ஜூலி. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றார்.
வந்த முதல் நாளே என்னை கட்டிப்பிடிக்க ஆள் இல்லை எனக் கூறி நடிகர் ஸ்ரீயின் பரிதாபத்தை பெற முயன்றார். அது முடியாமல் போனதால் அடிக்கடி கமெராவின் முன்பு கண்ணீர் விட்டு கதறி மக்களின் அனுதாபங்களை பெற முயன்றார்.
ஒரு கட்டத்துக்குப் பின் அவர் செய்வது எல்லாமே நாடகம் என தெரியவந்தது. மேலும் ஜூலி இடத்திற்கு ஏற்றார் போல் எப்படி வேண்டுமானலும் யாரிடம் வேண்டுமானலும் நடிப்பார் மாற்றி பேசுவார் என்ற அவரது சுயரூபம் தெரியவந்ததால் தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஜூலியின் குட்டு உடைந்ததால் காயத்ரி ஷக்தியை தவிர பிக்பாஸ் குடும்பத்தினர் அவரிடம் விலகியே உள்ளனர். இந்நிலையில் இன்று ஒளிபரப்படும் புரமோவில் சினேகனிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கும் ஜூலி, அடுத்த வாரம் பிக்பாஸ் குடும்பத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.
மேலும் இங்கு வந்தது முதல் தான் அழுது கொண்டேயிருப்பதாகவும் இனி வரும் நாட்களில் அது தன்னுடைய கேரக்டர் இல்லை என்றும் எரிச்சலூட்டும் சிரிப்புடன் கூறுகிறார். இதனை சினேகன் தனக்கே உரிய பாணியில் பார்க்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரா வாரம் தலைவர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். தற்போது தலைவராக சினேகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating