ஏமாற்றுவதில் வல்லவர்கள்: பிக்பாஸ் குறித்து நடிகை நமிதாவின் பதிவு..!!
பிரபல சேனல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிகுறித்து நாள்தோறும் பல்வேறு கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும், இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் சிலர் நிகழ்ச்சி குறித்து எதுவும் வாயை திறக்காமல் இருந்தாலும், ஒரு சிலர் கூறும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது.
அந்த வகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்தவாரம் வெளியேற்றப்பட்டவர் நடிகை நமிதா. இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியெற்றப்பட்டதிலிருந்து நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசுவதற்கு மறுத்து வந்தார்.
அப்படியிருக்கையில், திடீரென்று, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை மேற்கொண்டுள்ளார்.
அதில், நீ காலையில் சிரிப்போடு எழுவாய், ஆனால் உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு மன நிம்மதியை உடைப்பாள், தூள் தூளாக உடைந்த பீஸ்களை எடுத்து அந்த நாளை தொடங்கலாம் என்று போவாய். அதே பெண் மீண்டும் அடிப்பாள்.
இதனால் ஒரு கட்டத்தில் நீ பொறுமை இழப்பாய், காரணம் உனக்கும் தன் மானம் இருக்கும் தானே. நீங்கள் என்னை தீர்மானித்தது எனக்காக காட்டப்பட்ட வேடத்தை வைத்து மட்டும் தான்.
அந்த ஷோ இயக்குநர்கள் ஏமாற்றுவதில் வல்லுநர்கள். ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும். ஆனால், அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும்.
நீங்கள் அந்த நிகழ்ச்சியை பார்க்கமட்டும் தான் செய்தீர்கள், கவனிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating