முகம்சுழிக்க வைக்கும் கொடூர தண்டனை… இந்த வாலிபர் செய்த தவறுதான் என்ன?..!! (வீடியோ)

Read Time:3 Minute, 9 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி இளைஞர் இருவரை அடித்து உதைத்து மலம் உண்ண வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள வினேகா என்ற கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி பொதுமக்கள் முன்னிலையில் அடித்து, உதைத்து மலம் சாப்பிட வைத்துள்ளனர் பெண்ணின் உறவினர்கள்.

வாலிபரை அடித்து உதைத்து மலம் உண்ண வைக்கப்பட்டது மட்டுமல்லாமல், சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இதனை மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்திலும் பரவ விட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட வாலிபரிடம் விசாரித்த போது அந்த இளம்பெண்ணும், தானும் காதலித்து வந்ததாகவும், இது பெண் வீட்டாருக்கு பிடிக்காததால் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்துவைக்க அவர்கள் திட்டமிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் அந்த பெண்ணை துன்புறுத்தவில்லை என்றும், சம்பவம் நடந்த அன்று அந்தப் பெண் தான் தம்மை தோட்டத்திற்கு அழைத்ததாகவும், அப்போது பெண்ணின் சகோதரன் இருவரும் சேர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் தனக்கு இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது எனவும் கூறினார்.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஜெய்சிங் கூறுகையில் பாதிக்கப்பட்ட வாலிபரும், இளம்பெண்ணும் அருகருகே வசித்து வந்துள்ளனர், இளம்பெண்ணின் பெற்றோர்கள் தங்களது மகளை இந்த வாலிபர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக துன்புறுத்தி வருவதாக புகார் அளித்ததன் பேரில் வாலிபர் மீதும், அவரை அடித்து துன்புறுத்தி, மலம் உண்ண வைத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியதை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் குடும்பத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸில் புதிதாக எண்ட்ரி கொடுத்தது இந்த நடிகை தான்?..!!
Next post சினிமா தாண்டி நிஜ வாழ்க்கையில் லிப்-லாக் முத்தம் கொடுத்தது அந்த வயதில் தான்- ப்ரியா ஆனந்த்..!!