அமெரிக்க ஓபன் டென்னிஸ்: நிக்கோலாய், ஃபெடரர் அரையிறுதிக்கு தகுதி!
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி போட்டிகளில் நிக்கோலாய் டேவிடெனகோ, ரோஜர் ஃபெடரர் ஆகியோர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் முதல் தரவரிசை ஆட்டக்காரர் ரோஜர் ஃபெடரர் 7-6(7), 6-0, 6-7 (9), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளாக்கை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் நிக்கோலாய் டேவிடென்கோ, ஜெர்மனியின் டாம்மி ஹாசை 4-6, 6-7 (3), 6-3, 6-4, 6-4 என்ற கடுமையான செட்களில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
நேற்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா) மார்ட்டின்டம் (செக் குடியரசு) ஜோடி மிகைகல் (ரஷியா), லியோஸ் (செக் குடியரசு) ஜோடியுடன் மோதியது. இதில் பெயஸ் ஜோடி 6-4, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது.
அமெரிக்க ஓபனில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமேலி மவுரஸ்மோ (பிரான்சு) 3-ம் நிலை வீராங்கனையான மரியா ஷரபோவாவுடன் (ரஷியா) மோதுகிறார்.
மற்றொரு ஆட்டத்தில் தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜஸ்டின் ஹெனின், ஜெலீனா ஜன்கோவிக்கை (செர்பியா) எதிர் கொள்கிறார். ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு அரை ஆட்டம் ஒன் றில் பெயஸ் (இந்தியா), மார்ட்டின் டம் (செக்குடியரசு) ஜோடி, பால் ஹேன்லி (ஆஸ்திரேலியா), கெவின் (ஜிம்பாப்வே) ஜோடியுடன் மோதுகிறது.