அம்மாடியோவ் இத்தனை கொலையா? கதிகலங்க வைத்த பெண்..!!
அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் சைக்கோ பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
premenstrual dysphoric மற்றும் Chronic Hormone நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 39 வயதான லாரெட்டா ஜோன்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1993 முதல் 2017 இடையே மற்றும் மெக்சிகோ ஆகிய இரு நாடுகளிலும் இடம்பெற்ற 189 கொலைகளுடன் லாரெட்டா ஜோன்ஸிற்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
ஒரு பெரிய நிதி நிறுவனத்திறகாக கடன் சேகரிப்பாளராக பணியாற்றிய ஜோன்ஸ், கலிபோர்னியாவிலும், அமெரிக்கா எல்லை மாநிலங்களிலும் மற்றும் வடக்கு மெக்ஸிக்கோவிற்கும் பயணம் மேற்கொண்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கலிபோர்னியாவில் இடம்பெற்ற 137 கொலைகள், ஒரேகானில் 16, அரிசோனாவில் 11, நெவாடாவில் 8, மெக்சிக்கோவில் 17 என அனைத்து கொலைகளுடன் ஜோன்ஸிற்கு தொடர்புடையதை பொலிசார் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு அரிதான நோய் என குறிப்பிட்டுள்ள கலிபோர்னியா மன நல நிறுவன டாக்டர் அலோன்சோ பிராங்கோ கோன்சலஸ், ஜோன்ஸ் வாழ்நாள் முழுவதும் மனநல மருத்துவ மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எனினும், தற்போது வரை ஜோன்ஸிற்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating