கமல்ஹாசனை ஏமாற்றியது விஜய் டிவி?..!!
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வரும் விடயம் இது தான்.
அதாவது, பிக்பாஸை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு 25 கோடி ருபாய் சம்பளம் பேசியிருந்தார்கள். ஒவ்வொரு விளம்பர இடைவேளையின் போதும் நிகழ்ச்சியின் விளம்பரதாரரான அந்த மொபைல் நிறுவனத்தின் பெயரை சொல்ல வேண்டுமாம்.
அவங்கதான் 150 கோடி ருபாய் இந்த நிகழ்சிக்காக ஸ்பான்சர் செய்துள்ளர்கலாம். ஆனால் கமல் முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
இதுகுறித்து கமலுடன் பேசிய அந்த டிவி சேனலின் உயர்ந்த நிர்வாகியான அர்ஜுன் மேனன், அந்த மொபைல் நிறுவனம்தான் உங்களுக்கு 25 கோடி ருபாய் சம்பளம் கொடுக்கிறது என சொல்ல. கமல் கோபத்தின் உச்சத்திற்கே போய் விட்டாராம்.
சினிமாவில் வந்த நஷ்டத்திற்காகவும், மக்களின் வீடு தேடி செல்லும் நிகழ்ச்சி என்பதாலும்தான் வந்தேனே தவிர நான் உங்களுக்கு ஒன்னும் அடிமை இல்லைன்னு சொல்லியிருகிறார் கமல். ப்பிறகு சமாதனம் பேசி ஆரம்பம் முடிவு ரெண்டு முறை மட்டும் விளம்பரதாரர் பெயரை சொல்லுவாரம் கமல்.
அதுமட்டும் இல்ல. ஜெயம் ரவி, பாபா ராம்தேவ் வருவார்கள் அது இது என விஜய் டிவி பல கதைகளை சொல்லியே கமலை ஏமாற்றி வருகிறதாம். ஆனால் யாரும் வர வில்லையாம். ஒரு சில ஸ்க்ரிப்ட் கதைகள் கமலுக்கு சுத்தமா பிடிக்கவில்லையாம்.
இது நெட்டிசன்களின் வைரலான கருத்தாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
Average Rating