நள்ளிரவில் ஆபாச நடனம் ஆடும் பெண்கள்: ரூபாய் தாள்களை அள்ளி வீசும் ஆண்கள்..!! (வீடியோ)
சென்னை அண்ணா சாலையில் உள்ள தெருவில் நள்ளிரவு நேரத்தில் கலாசாரம் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
வாசலில் ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் பாடல்கள் ஒலிக்க விதவிதமான அலங்காரத்தில் வரும் பெண்கள் ஆபாச நடனம் ஆடுகின்றனர்.
இரண்டு கம்பிகளுக்கு நடுவே ஆடும் பெண்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
காதைக் கிழிக்கும் இசைக்கேற்ப உற்சாகத் தள்ளாட்டம் போடும் போதை ஆசாமிகள், நடனமாடும் பெண்களுக்குப் பணத்தை அள்ளி அள்ளி கொடுக்கின்றனர். சிலர் எல்லை மீறி நடனமாடும் பெண்கள் மீது ரூபாய் நோட்டுகளை தலையில் வாரி இறைக்கின்றனர்.
ஆபாச நடனமாடும் பெண்களுக்கு பார்வையாளர்கள் அள்ளி வீசும் பணத்தை சேகரிப்பதற்காகவே 2 பேர் உள்ளனர். அவர்கள் கீழே விழும் ரூபாய் தாள்களை எடுக்கும் வேலையைச் செய்கின்றனர்.
காவல்துறையினர் ரகசியமாக பணம் வாங்கிக் கொண்டு இந்த கலாச்சார நடனத்தை கண்டும் காணாமல் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான செய்தித் தொகுப்பை நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ளது.
Average Rating