ஓவியா மூலம் புகழ்பெற்ற ஆரவ் பிக்பாஸிற்கு வந்தது எப்படி தெரியுமா?
தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், இவ்வளவு பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தரும் என்பதை பிரபல ரிவியே கூட நினைத்து பார்க்கவில்லை. அதுபோல போட்டியாளர்கள் புகழ் மழையில் நனைந்து வருகிறார்கள்.
அதுபோல ஓவியாவால் புகழ்பெற்றவர் ஆரவ். இவர் கடந்த 1988ம் ஆண்டில் பிறந்தது நாகர்கோவில். ஆனால் படித்தது வளர்ந்தது எல்லாமே திருச்சி தான். பின்னர் சென்னையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.
இதன் பிறகு மாடலிங் துறைக்கு வந்தார். இவர் மாடலிங் துறையில் புகழ்பெற காரணம் அனந்த கிருஷ்ணன் என்ற போட்டோ கிராபர். இவர் மூலம் பல விளம்பர படங்களுக்கு மாடலாக இருந்துள்ளார். அதோடு பல விளம்பர பேனர்களிலும், விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
விளம்பர படங்களை தொடர்ந்து இவர் முதன் முதலில் நடித்தது மீண்டும் வா அருகில் வா என்ற படத்தில். இதனையடுத்து விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
அதில் எல்லாம் கிடைக்காத பேரும், புகழும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நண்பர் ஒருவர் மூலம் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.
Average Rating