பொலிசில் இருந்து தப்பிக்க நாயின் காதை கடித்த இளைஞர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 51 Second

80a39ab3-8cca-4a35-8979-3bf69072904aவிலங்குகள் மனிதர்களை கடிப்பது என்பது வழக்கமானது தான். ஆனால், மனிதன் விலங்குகளை கடிப்பது என்றால் ஆச்சர்யம் தான் அல்லவா!

ஆம், அப்படி ஒரு சம்பவம் தான் நிகழ்ந்துள்ளது இங்கிலாந்தில். தேடப்பட்டு வரும் குற்றவாளியை அந்நாட்டு போலீஸார் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது, காவல்துறையினரின் நாய் அந்த குற்றவாளியை பிடித்துவிட்டதாக தெரிகிறது.

குற்றவாளியை விடாமல் தொடர்ந்து கடித்தபடியே இருந்த நாய், அவரை விடவே இல்லை. ஆனால், தப்பி ஓட வேண்டும் என்பதற்காக அந்த நபர் நாயிடம் போராடி பார்க்கிறார். ஆனாலும், நாய் விடாமல் கடித்துக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் நாயின் காதை திருப்பிக் கடித்துவிட்டார். காலால் எட்டி உதைத்தும், அந்த நாயை கடித்தும் அந்த குற்றவாளி தப்பிக்க முயற்சிக்கிறார். அப்போது, அங்கு வந்த போலீஸார் குற்றவாளிகளை பிடித்து கைது செய்கின்றனர்.

இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த நபர், வீடியோவாக இதனை பதிவு செய்துள்ளார். “ஜெர்மன் ஷெப்பர்ட்” இனத்தை சேர்ந்த அந்த நாயின் பெயர் மன்ப்போல் தியோ. இந்த சம்பத்தையடுத்து, அந்த நாய்க்கு அதிக காயம் ஏற்பட்டு சில நாட்கள் வலியால் அவதிப்பட்டுவந்ததாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!!
Next post பெண்கள் கஞ்சா அடிப்பதை தட்டி கேட்ட நபர்: நேர்ந்த சோகம்..!! (வீடியோ)