புருவங்களை அழகாக்க இதை பின்பற்றுங்கள்..!!
புருவ முடியின் அடர்த்தியை அதிகரிக்க செய்து அழகாக்க இயற்கை வழியில் உள்ள சில அற்புதமான குறிப்புகள் இதோ,
புருவ முடியை அதிகரிக்க பின்பற்ற வேண்டியவை?
ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து சூடாக்கி, அதை விரல் நுனியில் தொட்டு, புருவங்களில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, அதனுடன் 1/2 டீஸ்பூன் ரோஸ்வாட்டர் கலந்து, வாரத்திற்கு 2 முறைகள் புருவங்களில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
வெங்காயத்தின் சாறு எடுத்து அதை புருவங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மட்டும் வைத்து அதன் பின் கழுவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டம்பளர் நீரில் 1/4 டீஸ்பூன் சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து, 2 நிமிடங்கள் கழித்து இறக்கி, ஆறியதும் மெல்லிய துணியால் அந்த தண்ணீரை நனைத்து புருவங்களில் துடைக்க வேண்டும்.
விட்டமின் C, E சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் சிட்ரஸ் ஆசிட் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லி போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
Average Rating