பள்ளத்தாக்கில் சாகசம் காட்டிய இளைஞர்கள்… நொடிப்பொழுதில் உயிரை விட்ட பயங்கரம்..!! (வீடியோ)
இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள ஆம்பொலி சுற்றுலா தளத்தில் இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் செய்த விபரீத சாகசம் அவர்களது உயிரை பலி எடுத்தது மட்டுமின்றி சடலத்தைக் கூட கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா தளத்திற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் மது குடித்துக்கொண்டே, பள்ளத்தாக்கின் தடுப்பு சுவரை மீது ஏறி அமர்ந்துக்கொண்டு விளையாட்டு காட்டுகின்றனர். இதனை அங்கிருந்த நண்பர்கள் காணொளியாக பதிவு செய்தது மட்டுமின்றி உற்சாகமும் படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் நிலை தடுமாறி மலையுச்சியிலிருந்து கீழே விழுந்து விட்டுள்ளனர். மேகங்கள் சூழ்ந்த அந்த பள்ளத்தாக்கில் அவர்கள் எங்கு விழுந்தார்கள் என்பதை கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர்களின் உடல்களைக் கூட மீட்பது கடினம் என அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். செல்வது இயற்கை காட்சிகளை கண்டு மனதிற்கு மகிழ்ச்சியை தேடி கொள்வதற்கு தானே தவிர, இப்படி குடித்து விட்டு உயிரை இழப்பதற்கு அல்ல.
Average Rating