மனைவியுடன் உறவுகொண்ட கணவனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை..!!

Read Time:3 Minute, 55 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)பிரித்தானிய நாட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டு வந்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள நியூகேசல் நகரில் பெயர் வெளியிடப்படாத கணவன் மனைவி வசித்து வருகின்றனர்.

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இருவருக்கும் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2016 செப்டம்பர் மாதம் முதல் மனைவியை கணவன் பாலியல் சிதர்வதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மனைவி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அவருக்கு தெரியாமல் கணவன் உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சில நாட்களில் மனைவி மது அருந்திவிட்டு தூங்கியபோது கணவன் உடலுறவில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அதனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.

வீடியோக்களை எடுத்த கணவன் அவற்றை ரகசிய எண்கள் மூலம் மனைவிக்கு தெரியாத வகையில் லாக் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கணவன் அலுவலகத்திற்கு சென்றபோது தனது செல்போனை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளார்.

அப்போது, அவரது செல்போனை எடுத்த மனைவி வீடியோ பகுதியை திறக்க முயற்சித்தபோது ‘Locked’ எனக் காட்டியுள்ளது.

’வீடியோக்களை எதற்காக மறைத்துள்ளார்?’ என சந்தேகம் அடைந்த மனைவி நீண்ட நேரம் முயற்சித்து இறுதியாக வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக கணவனை தொடர்புக்கொண்ட மனைவி ‘ தூக்கத்தில் இருந்தபோது எனக்கு தெரியாமல் பல நாட்கள் நீங்கள் என்னுடன் உடலுறவில் ஈடுப்பட்டு வந்துள்ளீர்கள்.

இதுமட்டுமில்லாமல், உங்களுடையை கீழ்த்தரமான நடவடிக்கைகளை வீடியோக்களாக எடுத்து என்னை அவமதித்துள்ளீர்கள். உங்களுடன் இனிமேல் சேர்ந்து வாழ முடியாது’ என ஆத்திரமாக பேசியுள்ளார்.

மனைவிக்கு அனைத்தும் தெரிந்துவிட்டதை அறிந்த கணவர் அதே நாளில் பொலிசாரிடம் சரணடைந்து அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, ‘கணவனாக இருந்தாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் தூக்கத்தில் இருந்த அவருடன் உடலுறவில் ஈடுப்பட்டது கிரிமினல் குற்றம்.

மேலும், பல நாட்களாக நிகழ்ந்து வந்த இந்நடவடிக்கைகளை வீடியோக்களாக பதிவு செய்தது கணவனின் மோசமான மனநிலையை காட்டுகிறது.

எனவே, கணவன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக’ நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்த சில நொடிகளிலேயே பிஞ்சு குழந்தை செய்த செயல்: வைரலாகும் வீடியோ..!!
Next post தூக்கமின்மை பிரச்சினையா? எப்படி கற்றாழையை பயன்படுத்துவது தெரியுமா?..!!