உறங்காத சிறுவன் நிரந்தரமாக உறங்கிய சோகம்…!!
நொச்சியாகம பிரதேசத்தினைச் சேர்ந்த 3 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று மாலை பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் மற்றும் அவனது தாய் வீட்டின் அருகாமையில் உள்ள மரம் ஒன்றின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த போது சிறுவன் உறங்காமல் பாதுகாப்பற்ற கிணற்றுப் பகுதியிற்கு சென்று அதில் வீழ்ந்துள்ளான்.
சம்பவம் இடம்பெற்ற போது சிறுவனின் தந்தை வீட்டில் இருக்கவில்லை என்பதுடன் 8 வயதான மூத்த மகன் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்துள்ளான்.
இந்நிலையில் தனது தம்பியைக் காணவில்லை என அறிந்து மூத்த மகனான அண்ணன் தம்பியை தேடிப் பார்த்துள்ளார்.
பின்னர் அயலவர்களின் உதவியுடன் சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு நொச்சியாகமை மருத்துவமனையிற்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் குறித்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating