தூங்கினால் உயிர் போய்விடும் – அரிய நோய்..!!
Read Time:1 Minute, 18 Second
இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கு, ஒரு வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறார்.
லியாம் டெர்பிஷைர்(17) என்ற அந்த வாலிபருக்கு ஹைப்போவெண்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற விசித்திர நோய் தாக்கியுள்ளது. இதனால் அவர் பிறந்தது முதலே பல அவதிகளை அனுபவித்து வந்துள்ளார்.
முக்கியமாக இவரால் தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூங்க முடியாது.
அப்படி தூங்கினால் அவரது நுரையீரல் செயல்பாடு முற்றிலும் நின்றுவிடும். மேலும் இதயத்துடிப்பின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டு, இரத்தக் கொதிப்பு ஏற்படும் என்பதுதான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது.
உலகில் மொத்தம் 1500 நபர்களுக்கு மட்டுமே இந்த நோய் தாக்கியுள்ளது.
எனவே, தகுந்த பாதுகாப்பு சாதனங்களை பொருத்திக் கொண்ட பின்புதான் உறங்க செல்கிறார் லியாம்.
Average Rating