வீட்டில் முடங்கிய ஜுலியைப் பற்றி தம்பியின் பரபரப்பு பேட்டி..!!
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கும் ஜூலி தனது இல்லம் திரும்பிய பிறகு மிகவும் கவலையில் உள்ளதாக ஜூலியின் தம்பி கூறியுள்ளார்.
விகடனுக்கு ஜூலியின் தம்பி ஜோஷ்வா அளித்துள்ள பேட்டியில், ‘பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஜூலி, சனிக்கிழமையே வீட்டுக்கு வந்துவிட்டார்.
வந்தவுடன் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முழுவதையும் ஹாட் ஸ்டாரில் பார்த்தவுடன் ரொம்பவே வேதனைப்பட்டார். ஆனா, வீட்டிலிருக்கும் அனைவரும் ஜூலிக்குதான் ஆதரவாக இருக்கிறோம்.
அம்மா, அப்பாவிடம் கொஞ்சம் கோபம் இருந்தது. ஆனால், நான் அவர்களை சமாதானம் படுத்திவிட்டேன்” என்றவரிடம், சமூகவலைதளத்தில் பரவி வரும் வீடியோவைப் பற்றி கேட்டோம்.
”அந்த வீடியோ பற்றி எனக்கு தெரியவில்லை. அதுபற்றி நான் ஜூலியிடம் எதுவும் பேசவில்லை. ஜூலி தற்போது ஓய்வில் இருக்கிறார். ஒரு இரண்டு மாதம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, அவரது வேலையை தொடர்ந்து செய்வார்.
ஆனால், கண்டிப்பாக சினிமாவுக்கு நடிக்க போக மாட்டார். ஏன்னா, வீட்டில் ரொம்ப கண்டிப்பு” என்று கூறியுள்ளார்.
Average Rating