பிக்பாஸில் இதை எத்தனை பேர் கவனித்தீர்கள்: ஜூலியை மறைமுகமாக தாக்கிய ஆர்த்தி..!!
பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஜூலியை பார்த்தால் தனக்கு மிகவும் பெருமையாக இருப்பதாக நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாக்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆர்த்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். தனது பாணி நகைச்சுவையால் சிறிது நாட்கள் கலகலப்பூட்டிய அவர், போட்டியில் வெற்றி பெறுவதற்காக மற்றவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கியும் பேசி வந்தார்.
அந்த வகையில் ஆர்த்தியிடம் வசமாக சிக்கியவர் ஜூலி. இருவருக்குள்ளும் பல சமயங்களில் மோதல்கள் நிகழ்ந்த நிலையில், ஜூலி போலியாக இருக்கிறார். யாரிடமும் உண்மையாக இல்லை என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார் ஆர்த்தி.
இந்நிலையில், கடந்த மாதம் ஆர்த்தி, ஜூலி ஆகிய இருவரது பெயரும் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில், இருவரையும் பேக் செய்யச் சொல்லி வீட்டை விட்டு புறப்பட தயாராகச் சொன்னார் கமல். அதன்படி இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்ப முற்பட்டபோது ஆர்த்தியை மட்டும் வெளியேற வேண்டும் எனவும், ஜூலி காப்பாற்றப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வெளியேறிய ஆர்த்தி, தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் என்ன நடக்கிறது என்று கவனித்து வந்தார். இதில் குறிப்பாக ஜூலி என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்கிய ஆர்த்தி, அவருக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை பதிவு செய்து வந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலி வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு கமலிடம் வீட்டில் இருந்த அனுபவம் குறித்து பேசினார். அதில், வீட்டில் இருப்பவர்கள் தனக்கு எது போன்ற உறவு என்பதை வரிசைப்படுத்திக் கூறினார். இந்த லிஸ்டில் ஆர்த்தி, ஓவியா ஆகியோரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இதுகுறித்து ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஜூலி தனது பிரியாவிடை பேச்சின் போது எனது பெயரையும், ஓவியாவின் பெயரையும் குறிப்பிடவில்லை. இதை எத்தனை பேர் கவனித்தீர்கள். எனக்கு பெருமையாக உள்ளது. நன்றி எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஒரு வாரம் கூட முழுவதுமாக இல்லாத ஸ்ரீ பெயரை அந்த லிஸ்டில் குறிப்பிட்ட அவர், இந்த இருவரின் பெயரை தெரிவிக்காதது குறித்து ஜூலியை விமர்சித்து வருகின்றனர்.
இதே போல் பிக்பாஸிலிருந்து வெளியே வந்த ஜூலி, பரணியை சந்தித்து மன்னிப்பு கேட்டது போல் விடியோ, புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. எனவே பரணியைப் போல் உங்களை ஜூலி சந்திப்பாரா என ஆர்த்தியிடம் ரசகர் ஒருவர் கேட்டு இருந்தார். இதற்கு அவர் பதில் அளித்ததாவது:
ஜூலி ஏன் என்னை சந்திக்க வேண்டும். அவர் கண்டிப்பாக வர மாட்டார். ஏனென்றால் நான் அவரது நடிப்பை நம்ப மாட்டேன் என ஜூலிக்கு நன்றாகத் தெரியும் என பதில் அளித்துள்ளார்.
Average Rating