இறந்துபோன தம்பியின் சடலத்திற்கு சகோதரி கொடுத்த பரிசு..!!

Read Time:1 Minute, 58 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90ஆந்திராவில் உயிரிழந்த தம்பியின் சடலத்திற்கு கண்ணீருடன் சகோதரி ராக்கி கட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், திருப்பூரு பகுதியை சேர்ந்த வினோத் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாட தனது நண்பர்களுடன் காரில் பேத்தபல்லி ஏரிக்கு சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போது திடீரென வினோத் காணவில்லை.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் மற்றும் தீயணைப்பு துறையினர், கிராம மக்களும் பல மணி நேரமாக தேடியும் சடலம் கிடைக்கவில்லை. மறுநாளும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தினர். பிறகு அவரை சடலமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வினோத்தின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வினோத்தின் சடலம் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு குடும்பத்தினர் விரைந்தனர். சடலத்தை பார்த்து துக்கம் தாங்காமல் கதறி அழுதனர்.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ரக்க்ஷா பந்தன் தினத்தன்று வினோத்துக்கு அவரது சகோதரி சிரிஷா ராக்கி கயிறு கட்டுவது வழக்கம். வினோத்தின் சடலத்துக்கு சகோதரி சிரிஷா கண்ணீருடன் ராக்கி கயிறு கட்டி கதறி அழுதார். இந்த சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிபிபி செய்தி நேரலையில் ஆபாச வீடியோ..!!
Next post பிக்பாஸ் வீட்டில் தற்போது தனிமைப்படுத்தப்படும் நபர்..!! (வீடியோ)