நடிகை கடத்தல் வழக்கு: மஞ்சுவாரியாரின் சதியால் குற்றச்சாட்டுக்கு ஆளானேன் – திலீப் தகவல்..!!

Read Time:3 Minute, 45 Second

201708121715300116_Dileep-bail-plea-again-in-Actress-Abduction-case_SECVPFகேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவருக்கு ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். இதையடுத்து திலீப், கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் திலீப் மீண்டும் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டதற்கு, தனது தரப்பு நியாயங்களை சரியாக கூறாததே காரணம் என்று கருதிய திலீப், தனக்காக இதுவரை ஆஜரான வக்கீலை மாற்ற முடிவு செய்தார்.

அதன்படி, திலீப் சார்பில் ஐகோர்ட்டில் ஆஜராக பிரபல வக்கீல் ராமன்பிள்ளை ஏற்பாடு செய்யப்பட்டார். அவர், திலீப்புக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்தார்.அதில், தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பல்வேறு தகவல்களை திலீப் கூறி உள்ளார். அந்த மனுவில் உள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-

நடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் கூறி உள்ளனர். பல்சர் சுனிலை நான் பார்த்ததே இல்லை. ஒருபோதும் அவரை சந்தித்ததும் கிடையாது. ஆனால் போலீசார் வேண்டுமென்றே அவரை எனக்கு தெரியும் என்று கூறி உள்ளனர்.

இதற்கு என் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சுவாரியாரின் சதி உள்ளது.

நடிகை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு மறுநாள், மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற மஞ்சுவாரியார், என்னை இந்த குற்றச்சாட்டில் இழுத்து விடும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்.

இதுபற்றி நான், போலீசாரிடம் கூறி உள்ளேன். ஏ.டி.ஜி.பி. சந்தியா என்னிடம் விசாரித்தபோது, மஞ்சுவாரியார் பற்றியும், அவரது நெருங்கிய நண்பர் ஸ்ரீகுமார்மேனன் ஆகியோர் பற்றியும் சில முக்கிய தகவல்களை தெரிவித்தேன். மஞ்சுவாரியாருக்கும், ஸ்ரீகுமார் மேனனுக்குமான தொடர்பு பற்றி கூறியபோது, ஏ.டி.ஜி.பி. சந்தியா அங்கிருந்த காமிராக்களை அணைத்து விட்டார்.

இந்த சதியில் என்னை வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சி நடந்தது. அதில், நான் மாட்டிக் கொண்டேன்.

இவ்வாறு அந்த புதிய ஜாமீன் மனுவில் திலீப் கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை கோர்ட்டு வருகிற 18-ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காப்பாற்றப்பட்ட காயத்ரி… கமலிடம் நேருக்கு நேர் சரமாரியாக கேள்வி கேட்ட பிரபல நடிகை..!! (வீடியோ)
Next post கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு காரணம் என்ன?..!!