களியக்காவிளை அருகே தோட்டத்து வீட்டில் அடைத்து கேரள மாணவி கற்பழிப்பு: காதலன்-நண்பர்கள் கைது..!!

Read Time:2 Minute, 42 Second

201708151720003633_Missing-kerala-girl-molested-boyfriend-friends-arrested_SECVPFகேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மேக்கோடு பனிச்சகுழி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவி, திடீரென்று மாயமாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடினார்கள்.

அப்போது அந்த மாணவியின் வீடு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த அஜிஸ் (வயது 31). அருண் (30) ஆகிய 2 பேர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவர்களின் செல்போன் டவர் மூலம் போலீசார் தங்கள் விசாரணையை தொடர்ந்தனர். அப்போது கொல்லம் அருகே ஆதிநல்லூர் என்ற இடத்தில் அவர்கள் இருப்பதாக செல்போன் டவர் மூலம் தெரிய வந்தது.

உடனே போலீஸ் படையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியைச் சேர்ந்த வின்ஸ் (31) என்பவர் வீட்டில் அந்த மாணவியும், அஜிஸ், அருணும் தங்கியிருந்தது தெரிய வந்தது. அந்த மாணவியை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள்.

அந்த மாணவியை அருண், காதலிப்பதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் களியக்காவிளை அருகே உள்ள ஒரு தோட்டத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று அவரை அருண் கற்பழித்துள்ளார். அதன் பிறகு தனது நண்பர்கள் உதவியுடன் அந்த மாணவியை கொல்லத்திற்கு கடத்திச் சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த மாணவியை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் மாணவியை கற்பழித்த காதலன் அருண், அவருக்கு உதவிய அஜிஸ், வின்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் டெனிஸ்வரன் ரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு..!!
Next post இந்த ஜப்பான் முதியவருக்கும் ஆழ்கடல் மீனுக்கும் 30 ஆண்டுகால நட்பு என்றால் நம்புவீர்களா?..!! (வீடியோ)